ரோஜாவில் பூத்த
இசையோடுபுலம்பெயாந்தஈழத் தமிழனின் வாழ்த்துக்கள்.
நூறு கோடிஇசைத் தொகுப்புகளால்உங்கள் முகம்உலகமெங்கும் விரிகிறது.
இசைக்கு மொழியில்லை என்றுஉங்கள் இசையேஉலகுக்கு புரிய
வைத்ததுஇசைக்கு ஏது எல்லையென்றுஉலக விருதுகளேஉங்களைத் தேடி வருகிறது.
ராஜாவின் இசைத் தாலாட்டில்நாங்கள் நனைந்தாலும்உங்கள் இசைகேட்டபோது தான்துள்ளிக் குதித்து எழுந்தோம்.
தாயகத்தைப் பிரிந்துநாங்கள் குளிர்க்கூடுகளில் வாழ்ந்தாலும்உங்கள் இசையேஎங்கள் வீடுகளில் ஊர்வலம் போகிறது.
நீங்கள் மீட்டுகிறகறுப்பு வெள்ளைக் கட்டைகள்அது ஏழு கட்டையோஅல்லது எட்டுக்கட்டையோஉங்கள் இசை கேட்டால்இதயம் மகிழ்கிறது.
அங்கே கொத்துக் கொத்தாய்எம் மக்கள் அழிந்து போகஇங்கே தமிழ் வானொலிகளில்"எந்தன் தேசத்தின் குரல்…"பாடல்உ(எ)ங்கள் குரலாய் தினம் ஒலிக்கிறது.
கன்னத்தில் முத்தமிட்டால்திரைப்படத்திற்கு பலவிமர்சனங்கள் இருந்தாலும்"விடை கொடு எங்கள் நாடே"என்ற பாடல்எங்கள் தாலாட்டாய் ஆனது.
சன்னங்கள் வெடித்துச் சிதறஎங்கள் தேசமே சிவக்கிறதுகுருதி பெருகி வழியும்நெஞ்சுக்குழிகள் காக்கபதுங்கு குழிகளிலும்உங்கள் இசை கேட்கிறோம்.
எங்கள் கண்ணிர் துளிகள்காய்ந்து போகஉங்கள் இசைத் துளிகள்மயிலிறகாய் மனம் தடவுகிறது.
பாரததேசத்திற்கு கிடைத்தபெரும் சொத்து நீங்கள்பாரததேசம்...இன்று எங்களை வெறுத்தாலும்என்றோ ஒரு நாள்எங்களை நெருங்கி வரும்!
பாரதிராஜாவின்தாஜமகால் திரைப்படத்திற்குநீங்கள் இசையமைத்திருக்கலாம்ஆனால் இனிதாஜமகாலே பார்த்து அதிசயிக்கும்உலக அதிசயமாய் நீங்கள்.
எங்கள் செவிவழிஇதயம் எங்கும் நிறைந்தஇசையப் புயலேஉங்கள் அடக்கமான வார்த்தைகளால்எல்லாப் புகழையும்இறைவன் உங்களுக்கே சேர்த்துள்ளார்.
உங்கள் இசைப் பாதையில்எத்தனை முட்களை கடந்துநீங்கள் ஒரு ரோஜாவில் மலர்ந்தீர்கள்.
எங்கள் விடுதலைப் பாதையில்ஆயிரம் முதலைகளை கடந்துநாங்களும் மீண்டும் மலர்வோம்.
இசை உலகில் உங்களுக்குகிடைத்த இந்த அங்கிகாரம்எங்கள் தேசத்திற்கும்ஒரு நாள் கிடைக்கும்அன்று உங்களைச் சந்திப்போம்இசையால்உலகை வென்றவர் நீங்கள்வாழ்க உங்கள் குடும்பம்தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்!
-வசீகரன்,நோர்வே
22.02.2009


















































